Search This Blog

Showing posts with label democracy. Show all posts
Showing posts with label democracy. Show all posts

Sunday, August 10, 2014

கம்யுனிசத்தின் கறுப்பு பக்கங்கள்....




வாய் கிழிய பொதுவுடைமை பேசும்..

ஆனால் கட்சி மட்டும் தனி உடமை...

தனி மனித சுதந்திரத்தை குழி தோண்டி புதைத்துவிட்டு
சமத்துவம் பேசி என்ன பயன்...

மனித உரிமையை மிதித்து விட்டு
தொழிலாளர் உரிமை பேசி என்ன பயன்...

ஜால்ரா அடித்தால் தோழர்..
.
மாற்றுகருத்து இருந்தால் எதிரி..
.
முதலாளித்துவத்தை சாகும்வரை ஏதிர்ப்போம்...

ஆனால் சர்வாதிகாரத்தை தினம் தினம் வளர்ப்போம்..

கம்யுனிச கிழட்டு சிங்கம் காஸ்ட்ரோவே சொல்லி விட்டார்
இனி கம்யுனிசம் வேலைக்கு ஆகாதென்று...

என்னதான் கூறினாலும் இத்துப்போன சித்தாந்தர்த்தை
வேதமாக கொண்டாடும் நீங்கள் கேட்கமாட்டீர்கள் என்பது உலகறிந்த விடயம்...

கம்யுனிச நண்பா...உனக்கொரு கதை கூறுகிறேன் கேள்...

சீன 65 மில்லியன்...
சோவிஎத் ஜூனியன் 20 மில்லியன்...
கம்போடியா 2 மில்லியன்...
வடகொரியா 2 மில்லியன்...
ஆபிரிக்கா 1.7 மில்லியன்...
வியட்நாம் 1 மில்லியன்...
கிழக்கு ஐரோப்பா 1 மில்லியன்...

என்ன புரியவில்லையா...

எல்லாம் கொள்கைக்காக கொன்றோளிக்கபட்ட அப்பாவி பொதுமக்கள்...

கூட்டி கழித்துபார்...உலக போர்களில் இறந்தவர்களை விட அதிகம் இந்த தொகை...

முதலாளித்துவம் சுட்டால்  கொலை...கம்யுனிசம் சுட்டால் கொள்கையா...

சர்வதிகாரம் மூலம்  கொள்கைகளை அடுத்தவன் வாயில் திணிக்கும்
கம்யுனிசத்தை விட கொடிய அடக்கு முறை வேறு எங்கு இருக்க முடியும்...

கம்யுனிச நண்பர்களே..விழித்தெழுங்கள்....

உங்களின் போராட்டங்களுக்கு ஜனநாயகத்தில் சிறந்த பதில் உண்டு...

கம்யுனிசம் எனும் இரத்தவெறியை தூக்கிஎறிந்து  விட்டு
இன்றே ஜனநாயக நீரோட்டத்தில் இணையுங்கள்...

வாழ்க ஜனநாயகம்...