Search This Blog

Wednesday, July 6, 2011

பர்சனல் பயோடேட்டா-6




பெயர்: கனிமொழி

செல்லப்பெயர்: கருணா(ய்)நிதியின் இலக்கிய வாரிசு

தொழில்: வேலை வெட்டி எதுவும் இல்லைங்கோ

பொழுதுபோக்கு: கதை,கவிதை எழுதுதல்,கொள்ளை அடித்தல், கம்பி எண்ணுதல்

வருமானம்: எண்ணுவதற்கு நேரமில்லை

பலம்:பணம், கருணாநிதி,தி.மு.க

பலவீனம்: சகோதரர்கள்,பேராசை

சமீபத்தைய சாதனை: 2G Spectrum ஊழல், கருணாநிதி தலையில் மிளகாய் அரைத்தது

நீண்டநாள் சாதனை: பாராளுமன்ற உறுப்பினர் ,2 முறை திருமணம்

சமீபத்தைய ஏரிச்சல்: 2G Spectrum ,திகார் ஜெயில்,நீரா ராடியா

சிறந்த நண்பர்கள்: A.ராஜா, நீரா ராடியா

சமீபத்தைய ஆப்பு: திகார் ஜெயில்







பெயர்: திருவாளர் பொதுஜனம்

பட்டபெயர்: இளிச்சவாயர், ஏமாளிகள்

பலம்: ஒட்டு உரிமை, ஜனநாயகம்

பலவீனம்: ஒட்டு போடாமை, அரசியல்வாதிகள், ஜாதி வெறி

நீண்டகால சாதனை:ஜனத்தொகை 

நீண்டகால எரிச்சல்: அரசியல்வாதிகள், சாமியார்கள்

சமீபத்திய எரிச்சல்: சினிமா நடிகர்களின் அலப்பறைகள்

தேர்தல்:  இலவசங்களின் சீசன்,ஒரு நாள் விடுமுறை

எஜமான்: அரசியல்வாதிகள், சாமியார்கள், நடிகர்கள்

ஜனநாயகம்: கணக்கில் எடுப்பதில்லை

நம்புவது; அரசியல்,சினிமா,கடவுள்,போலிச்சாமியார்கள், சொல்புத்தி

நம்பமறுப்பது: சொந்த புத்தி ,தன்னம்பிக்கை,பகுத்தறிவு

அரசியல்வாதிகள்: ஒட்டு பொறுக்கிகள்,புளுகு மூட்டைகள்

தினமும் ஏறுவது : கடன், வன்முறை,சுயநலம் 

தினமும் குறைவது : பேங்க் பேலன்ஸ்,தன்னம்பிக்கை,அகிம்சை,பொதுநலம்

Monday, July 4, 2011

இலங்கை- மிக அபூர்வமான படங்கள்-1


இலங்கையின் 18ம் நூற்றாண்டு அரிய புகைப்படங்கள்











Friday, July 1, 2011

இளநீரின் மருத்துவ குணங்கள்...



இளநீர் உடலுக்குக் குளிர்ச்சியை அளித்து இரத்தத்தில் சேர வேண்டிய தாது உப்புக்களைச் சேர்த்து உடலின் செயல்திறனை ஊக்குவிக்கிறது. இளநீர் இயற்கை அளித்த இனிய பானம் மட்டுமன்று பல பிணிகளைத் தீர்க்கும் மாமருந்தாகவும் உள்ளது.இளநீர் என்பது இயற்கையிலேயே உருவான உடலியல் இயக்கங்களுக்கு இன்றியமையாத பல தாது உப்புகள் அதிகமாக உள்ள ஒரு பானம்(Isotonic Drink).


இருதயம், கல்லீரல், சிறுநீரகம், கண்கள் மற்றும் இரத்த நாளங்களில் உஷ்ணம் ஆதிக்கம் அடையாமல் இருக்க உறுதுணையாகிறது. மயக்கம், அசதி ஏற்படும் போது மருத்துவரிடம் செல்வதற்கு முன் இரண்டு குவளை இளநீர் அருந்துவது என்பது ஒரு பாட்டில் சலைன் ஏற்றுவதற்குச் சமமாகும்.


கடும் நீரிழப்பின் போது(severe dehydration) சரியான மாற்றுக் கிடைக்காத போது இளநீரையே நேரடியாக இரத்த நாளங்களில் ஏற்ற முடியும். மே, ஜூன் ஆகிய இரு மாதங்களிலும் வெயில் தகிக்கும்.அப்போது உடலிலிருந்து வியர்வை ஏராளமாக வெளியேறுவதால் நீர்க்கடுப்பு ஏற்படலாம். அப்போது இரண்டு குவளை இளநீர் பருகுவது நல்லது.



பேதி சீதபேதி, ரத்த பேதி ஆகும் போது மற்றெல்லா உணவுகளையும் தவிர்த்து விட்டு உடனடியாக இளநீர் பருகி வர உடல் அசதி, மயக்கம் வராது. சிறுநீரகக்கல், சிறுநீர்க்குழாய் பாதிப்பு(Urinary Infection), போன்ற கோளாறுகள் வந்துவிட்டால் முதல் மருந்தே இளநீர் தான்.

டைபாய்டு, மலேரியா, மஞ்சள் காமாலை, அம்மை நோய்கள் போன்றவற்றால் பாதிக்கப்படும் போது இளநீரைத் தாராளமாகக் குடிக்க வேண்டும். அறுவை சிகிச்சைகளுக்குப் பின் திரவ உணவு மட்டுமே சாப்பிட வேண்டிய சமயங்களில் இளநீருக்கு முன்னுரிமை வழங்கி உபயோகித்தால் அறுவை சிகிக்சைப் புண் (Surgical Sore) விரைவில் குணமடையும்.

உணவு எளிதில் ஜீரணமாவதற்கு இளநீரில் உள்ள தாதுக்கள் பயன்படுவதால் செரிமான உறுப்புக் கோளாறுகளால் அவதிப்படும் குழந்தைகளுக்கு வாந்தி வரும் போது இளநீர் கொடுத்தால் வாந்தி கட்டுப்படும். நாக்கு வறட்சி நீங்கும்.

கோடைக்காலம் மட்டுமின்றி எல்லாக் காலங்களிலும் அருந்தக் கூடிய இனிப்பும் குளிர்ச்சியும் கொண்ட இளநீரை அருந்தி வந்தால் உடல் வளமை பெற்று நோயற்று ஆரோக்கியத்துடன் வாழலாம்.

உடலுக்குக் கேடு தரும் பல்வேறு வேதிப்பொருட்களை உள்ளடக்கிய கார்பானிக் குளிர்பானங்கள்(Carbonated Drinks), பனிக்கூழ்(Ice cream) ஆகியவற்றை விட உடலுக்குப் பல மடங்கு நலம் தரும் இயற்கை பானமான இளநீரைப் பயன்படுத்துவதே ஆரோக்கியமான வழி.

மேலும் தோல் பளபளப்பாக சிவப்பாக மாற 24 மில்லி கிராம் ஸல்ஃபர் உப்பு தேவைப்படுகிறது. இந்த ஸல்ஃபர் உப்பு இரத்தம் சுத்தம் அடையவும் கல்லீரல் நன்றாக இயங்கவும் உதவுகிறது. இத்துடன் தோல் முடி நகங்கள் ஆரோக்கியமாக வளரவும் உதவுகின்றன. இந்த உப்பு இளநீரில் அதிகம் காணப்படுகிறது.


Source: www.tech.lankasri.com