Search This Blog

Monday, September 8, 2014

தமிழ்நாட்டு ஊர்களின் பெயர்களும் அதன் பின்னணியும்....




தமிழகத்தின் ஹார்ட் பீட்டே சென்னை தாங்க, முற்காலத்தில் சிறு சிறு கிராமங்களாக இருந்ததெல்லாம் இணைந்து உருவானது தான் சென்னை.
சிறுதுளி பெருவெள்ளம் என்பது போல் பல கிராமங்கள் இணைந்து சென்னை பிரமாண்டமாய் உருவெடுத்துள்ளது.

அப்படி இணைந்த கிராமங்களின் பெயர்கள் உருவானதன் பின்னணியை தெரிந்து கொள்வது சுவாரஸ்யமான ஒன்றே.

- 108 சக்தி ஸ்தலங்களில் 51வது ஊர். ஆகையால் ஐம்பத்து ஒன்றாம் ஊர் என்று அழைக்கப்பட்டு, பின்னாளில் இவ்வூர் அம்பத்தூர் என மாறியது.

- Armoured Vehicles And Depot of India என்பதின் சுருக்கமே ஆவடி(AVADI).

- 17,18ம் நுற்றாண்டுகளில் நவாப் ஒருவரின் கட்டுப்பாட்டில் இருந்தது இப்பகுதி. அவருடைய குதிரைகளின் பசியை போக்கும் நந்தவனமாக இது விளங்கியதால், garden of horses என்னும் பொருள் படும் Ghoda bagh என்று உருது மொழியில் பெயர் வைத்தார். பின்னாளில் அதுவே கோடம்பாக்கமாக மாறியது.

- மகப்பேறு என்பதே மருவி முகப்பேர் ஆனது.

- தென்னை மரங்கள் நிரம்பிய பகுதி அது. ஆகையால் தென்னம்பேட்டை என பெயர் வைத்தார்கள். பிற்பாடு அது தேனாம்பேட்டையாக மாறிப்போனது.

- சையிது ஷா பேட்டை தான் சைதாபேட்டை என அழைக்கப்படுகிறது.

- முற்காலத்தில் வேதஸ்ரேணி என அழைக்கப்பட்டது தற்போதைய வேளச்சேரி.

- உருது வார்த்தையான che bage (six gardens என்பது இதன் பொருள்) என்பதிலிருந்து உருவானது தான் சேப்பாக்கம்.

- சௌந்தர பாண்டியன் பஜார் என்பதின் சுருக்கமே பாண்டி பஜார்.

- சிவபெருமானுக்கு உகந்த வில்வமரங்கள் அதிகம் இருந்ததால் மகாவில்வம் என அழைக்கப்பட்ட இப்பகுதி, பின்பு மாவில்வம் என்றாகி, காலப்போக்கில் எப்படியோ மாம்பலமாகி விட்டது.

- நீதி கட்சி தலைவர் சர். பி.டி.தியாகராஜன் செட்டியின் பெயராலேயே இப்பகுதி தியாகராய நகர் என அழைக்கப்படுகிறது(தி.நகர்).

- புரசை மரங்கள் மிகுதியாக இப்பகுதியில் இருந்ததால், இப்பகுதி புரசைவாக்கம் ஆனது.

- 17ம் நூற்றாண்டில் இங்கு வாழ்ந்து வந்த ஒரு முஸ்லீம் துறவி ‘குணங்குடி மஸ்தான் சாகிப்’. இவரது சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தொண்டி. ஆகையால் அப்பகுதி மக்கள் அவரை தொண்டியார் என அழைத்தனர். அந்த ஏரியா தான் தற்போதைய தண்டயார்பேட்டை.

- முன்பு இப்பகுதி ஆடு மாடுகள் மேயும் திறந்தவெளியாக இருந்துள்ளது. அதனாலேயே மந்தைவெளி என்றழைக்கபடுகிறது.

- மயில் ஆர்ப்பரிக்கும் ஊர் என்பதே மயிலாப்பூர் என மாறிப்போனது.

- பல்லவர்கள் காலத்தில் போர்கள் நடத்த இவ்விடத்தையே பயன்படுத்தியதால், இப்பகுதி போரூர் எனப்படுகிறது.

- சில நூறு வருடங்களுக்கு முன்பு இப்பகுதி முழுவதும் மூங்கில் மரங்கள் இருந்தது. அதனாலேயே பெரம்பூர் எனப்படுகிறது.

- தாமஸ் பாரி என்பவர் இப்பகுதில் வணிகம் செய்துவந்தார். மக்கள் மத்தியில் மிகவும் மதிப்பு பெற்றிருந்த அவரின் பெயராலேயே இப்பகுதி பாரிமுனை (பாரிஸ் கார்னர்) ஆனது.


Source: http://www.newindianews.com/view.php?20IOlRdbcI40634e3SMQ3022YmD3ddcfDmI30eM6AKae4q04A4cb3lOm23

Tuesday, August 26, 2014

கார்களின் கல்லறை....



பெல்ஜியம்  நாட்டில் உள்ள கைவிடப்பட்ட கார்களின் உறைவிடமே இந்த படங்களாகும்.....
















Saturday, August 16, 2014

இந்தியாவின் முதலாவது சுதந்திரதினம் - அரிய படங்கள்.

















Monday, August 11, 2014

பணம்





நிலையற்ற வாழ்கையை ஆட்டிபடைக்கும் 
நிறையற்ற காகிதம் ...

பாதளம் வரை பாயும் பலம்மிக்க அஸ்திரம் 
கடவுளே ஆனாலும் கட்டிபோடும் மந்திரம்...

வந்தால் பாமரனை கூட  பல்லக்கில்  ஏற்றும் 
போனால் அரசனை கூட ஆண்டியாக்கும்..

மது தரும் போதை சில நிமிடம், மாது தரும் போதையோ சொற்ப தருணம் 
அனால் பணம் தரும் போதை அளவற்றது...

பலரை எட்டி பார்க்காது, சிலரை தொட்டு பார்க்கும் 
ஆனால் வெகு சிலரிடம் மட்டுமே கொட்டி கிடக்கும்....

பலநேரம் தேடினாலும்  விலகி ஓடும் 
சிலநேரம் ஒதுங்கினாலும்  விடாது துரத்தும்... 

இல்லாவிடில் நஷ்டம், அளவுக்கு மீறினால் கஷ்டம் 
அளவோடு இருந்தால் சுபீட்சம்...

இருப்பவன் இறந்தும் வாழ்வான் 
இல்லாதவன் வாழ்ந்துகொண்டே சாவான்...

சும்மாவா சொன்னார்கள் பணம் இல்லாவிடில் பிணம் என்று.... 


Sunday, August 10, 2014

நீரிழிவு நோயாளிகள் தைரியமாக சாப்பிடக்கூடிய பழங்கள்!




உலகில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளது.
இத்தகைய நீரிழிவு நோய் வருவதற்கு காரணம், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பது தான். மேலும் இந்த நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், எதை சாப்பிடுவதாக இருந்தாலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
இல்லாவிட்டால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரித்து, உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும். ஆனால் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஒருசில பழங்களை சாப்பிடுவதன் மூலம் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம்.
இதோ, நீரிழிவு நோயாளிகள் பயமின்றி நிம்மதியாக சாப்பிடக்கூடிய சில பழங்களைப் பார்ப்போம்.
கிவி பழம்
இது நீரிழிவு நோயாளிகளுக்கான ஒரு சிறந்த பழம். ஏனெனில் இது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும்.
செர்ரி
செர்ரி பழங்களில் கிளை சீமிக் இன்டெக்ஸின் அளவு 20 மற்றும் அதற்கு குறைவாகத் தான் இருக்கும்.
எனவே இதனை அவ்வப்போது அளவாக சாப்பிட்டு வந்தால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுடன் வைக்கலாம்.
கொய்யா
கொய்யாப்பழத்தை நீரிழிவு நோயாளிகள் சாப்பிடுவது மிகவும் நல்லது. மேலும் இது மலச்சிக்கல் பிரச்சனையைப் போக்கும். அதுமட்டுமின்றி, கொய்யாப்பழத்தில் வைட்டமின் `ஏ’ மற்றும் சில அதிக அளவிலும், கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாகவும் நிறைந்துள்ளது.
பெர்ரிப் பழங்கள்
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், எந்த ஒரு பயமும் இன்றி பெர்ரிப் பழங்களான ஸ்ட்ராபெர்ரி, ராஸ்பெர்ரி போன்றவற்றை சாப்பிடலாம். ஆனால் அளவாக சாப்பிடுவது மிகவும் சிறந்தது.
ஆப்பிள்
தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் ஆரோக்கியமாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் சொல்வார்கள். இது நீரிழிவு நோயாளிகளுக்கும் தான்.
ஏனெனில் ஆப்பிள் சாப்பிட்டால், அதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் கெட்ட கொலஸ்ட்ராலை குறைப்பதோடு, இது செரிமான மண்டலம், நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
அன்னாசி
அன்னாசிப் பழமும் சர்க்கரை நோயாளிகளுக்கான பழம் தான். இந்த பழத்தில் ஆன்டிவைரல் மற்றும் நோயெதிர்ப்பு அழற்சி தன்மை அதிகம் இருக்கிறது.
பேரிக்காய்
சர்க்கரை நோய் உள்ளதா? அப்படியெனில் பேரிக்காயை சாப்பிடுங்கள். ஏனென்றால், பேரிக்காயில் வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள உதவும்.
பப்பாளி
பப்பாளியும் சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்தது. ஏனெனில் இதில் வைட்டமின்கள் மற்றும் மற்ற கனிமச் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன.
தர்பூசணி
தர்பூசணியில் கிளைசீமிக் இன்டெக்ஸ் அதிகம் உள்ளது. எனவே இதனை அளவுக்கு மிகவும் குறைவாக எடுத்துக் கொள்வதால், உடலுக்கு நீர்ச்சத்தானது கிடைத்து, உடல் வறட்சியானது தடுக்கப்படும்.
மாதுளை
அழகான சிவப்பு நிறத்தில் உள்ள மணிகளைக் கொண்ட மாதுளையும் நீரிழிவு நோயாளிகள் தைரியமாக சாப்பிடக் கூடிய பழங்களுள் ஒன்று. ஏனெனில் இது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும்.
பலாப்பழம்
பலாப்பழம் மிகவும் இனிப்பாக இருப்பதால், இதனை நீரிழிவு நோயாளிகள் அறவே தொடக்கூடாது என்று நினைக் கக்கூடாது. ஏனென்றால், இந்த பழம் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் சிறந்த, இன்சுலின் சுரப்பை அதிகரிக்கும் பழங்களுள் ஒன்றாகும்.
நெல்லிக்காய்
கசப்பு தன்மைக் கொண்ட இந்த நெல்லிக்காய் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் சிறப்பான பழமாகும். இதில் வைட்டமின் `சி’ மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், இதனை தினமும் உணவில் சேர்த்து வருவது மிகவும் நல்லது.


Source: http://www.lankasritechnology.com/view.php?202609F220eZnBd34eaImOlH4cbdQ6AAcddcyIMQMdbc4HlOmae43dBnZ3e033F90603

கம்யுனிசத்தின் கறுப்பு பக்கங்கள்....




வாய் கிழிய பொதுவுடைமை பேசும்..

ஆனால் கட்சி மட்டும் தனி உடமை...

தனி மனித சுதந்திரத்தை குழி தோண்டி புதைத்துவிட்டு
சமத்துவம் பேசி என்ன பயன்...

மனித உரிமையை மிதித்து விட்டு
தொழிலாளர் உரிமை பேசி என்ன பயன்...

ஜால்ரா அடித்தால் தோழர்..
.
மாற்றுகருத்து இருந்தால் எதிரி..
.
முதலாளித்துவத்தை சாகும்வரை ஏதிர்ப்போம்...

ஆனால் சர்வாதிகாரத்தை தினம் தினம் வளர்ப்போம்..

கம்யுனிச கிழட்டு சிங்கம் காஸ்ட்ரோவே சொல்லி விட்டார்
இனி கம்யுனிசம் வேலைக்கு ஆகாதென்று...

என்னதான் கூறினாலும் இத்துப்போன சித்தாந்தர்த்தை
வேதமாக கொண்டாடும் நீங்கள் கேட்கமாட்டீர்கள் என்பது உலகறிந்த விடயம்...

கம்யுனிச நண்பா...உனக்கொரு கதை கூறுகிறேன் கேள்...

சீன 65 மில்லியன்...
சோவிஎத் ஜூனியன் 20 மில்லியன்...
கம்போடியா 2 மில்லியன்...
வடகொரியா 2 மில்லியன்...
ஆபிரிக்கா 1.7 மில்லியன்...
வியட்நாம் 1 மில்லியன்...
கிழக்கு ஐரோப்பா 1 மில்லியன்...

என்ன புரியவில்லையா...

எல்லாம் கொள்கைக்காக கொன்றோளிக்கபட்ட அப்பாவி பொதுமக்கள்...

கூட்டி கழித்துபார்...உலக போர்களில் இறந்தவர்களை விட அதிகம் இந்த தொகை...

முதலாளித்துவம் சுட்டால்  கொலை...கம்யுனிசம் சுட்டால் கொள்கையா...

சர்வதிகாரம் மூலம்  கொள்கைகளை அடுத்தவன் வாயில் திணிக்கும்
கம்யுனிசத்தை விட கொடிய அடக்கு முறை வேறு எங்கு இருக்க முடியும்...

கம்யுனிச நண்பர்களே..விழித்தெழுங்கள்....

உங்களின் போராட்டங்களுக்கு ஜனநாயகத்தில் சிறந்த பதில் உண்டு...

கம்யுனிசம் எனும் இரத்தவெறியை தூக்கிஎறிந்து  விட்டு
இன்றே ஜனநாயக நீரோட்டத்தில் இணையுங்கள்...

வாழ்க ஜனநாயகம்...

Saturday, August 9, 2014

Why I am an Atheist?





The Holy Books of God

Sow the seeds of death and destruction

Countless crusades and mindless jihads

Drowning humanity in the blood of innocents

Precious lives vanished in vain

In the name of almighty God.

Oh insecure humans, Look at you

Trying to comfort yourself through blind faith

Believing in manipulated fairytales without questioning  

Feeding the kids with lies and deception

Millennia worth of religious rhetoric rendering the 6th sense useless

How could the human race be oblivious to this self deception?

The sons of God and prophets of the Lord

The perpetrated symbol of love, peace and deliverance

Became the agents of chaos contrary to the popular believe

Wreaking havoc on our planet by dividing us religiously

Obsessed with God and religion, we succumb to the hands of

Religious mafias and self-proclaimed agents of God


Four religions with four different Gods

Waging a battle for spiritual supremacy

If there is only one God, Which one is real?

Out of Jesus, Allah, Shiva, Who created the universe?

Everybody knows the answer is Big Bang Theory

But our arrogance ties us to the imaginary utopia

Elaborate structures elegantly designed

Some of them are even built with solid gold

If God is omnipresent, why do we need institutions?

If God in omnipotent, why do we need a hierarchy to approach him?

Replace the religious institutions with schools and universities,

Let the real education guide our society.

If God created the universe in seven days,

Why life is only confined to the third rock from the sun?

There are Trillions of planets out of billions of galaxies,

But God is found and worshiped only on Earth.

Statistically speaking, chances of alien life on another planet

Outweighs the chance of existence of God

The concept of heaven and hell, what a ridiculous theory

Like a boomerang, we always reap what we sow

There is no judgment day; Karma is the payback for our sins

Angels the guardian of heaven and demons the ruler of hell,

Fictitious characters born out of an elaborate scam.

The only demon we fight is within ourselves.


Every atom in our body was produced out of an exploding star

Religion cannot redeem us, but Mother Nature will

There is no afterlife beyond death; like dust to dust

And ashes to ashes, we will be recycled atom by atom

Cell by cell by Mother Nature and will become

The ingredients of new life; thus fulfilling the cycle.


Where was he? Where was he?

Where was he when his beloved creations needed him the most?

Why has he forsaken the cries of war?

Why has he forgotten the pain of disasters?

Is he a sadist to let innocent people suffer?

Or are we the players of his sadist games?


As per evolution, humans are selected by the

Natural order to reign supreme on Earth.

Let’s renounce the imaginary God and religions

Let’s embrace humanity and science and unite for peace

A world without God and religion would be

A better place for humanity.