Search This Blog

Friday, April 30, 2010

முப்பரிமான புகைப்படம்..

கீழே உள்ள படத்தை நன்றாக உற்று பாருங்கள்...சிறிது நேரத்தில் படம் முப்பரிமாணம் உடையதாக மாறும்...தரவிறக்கம் செய்து கணணி திரையில் பார்த்தல் இன்னும் நன்றாக இருக்கும்..

Sunday, April 25, 2010

இவர்களும் மனிதர்கள் தான்- தாராவி பற்றிய ஒரு பார்வை

இந்தியாவின் Manhattan என்று அழைக்கப்படும் மும்பை நகரில் அமைந்துள்ள மிகவும் சிறிய ஆனால் அதிக சனத்தொகை கொண்ட ஒரு பிரதேசமே தாரவி...உலகின் மிகப்பெரிய சேரிகளில் ஒன்றாக தாரவி விளங்குகிறது..வெறும் 0.67 சதுர மைல் பரபளவை கொண்ட தாராவியில் சுமார் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் வாழ்கின்றனர்...மும்பையின் பிரதான இரண்டு ரயில் பாதைகளுக்குள் அமைந்துள்ள தராவி ஆரம்பத்தில் ஒரு தீவாகவே இருந்தது,பின்பு காலபோக்கில் தண்ணீர் வற்ற மக்களின் குடியேற்றம் ஆரம்பித்தது...தாராவியின் சனத்தொகையில் பெரும்பாலானோர் தலித்களாக உள்ளனர்.மேலும் சிறிய அளவில் இஸ்லாமியர்களும்,கிறிஸ்தவர்களும் உள்ளனர்.






தாராவியின் பொருளாதாரம் என்று பார்த்தல் மண்பானை கைத்தொழில் மற்றும் புடவை கைத்தொழில் என்பன முக்கிய இடம்பெறுகின்றன..மேலும் கழிவுபோருட்களை மீள்சுலாட்சி செய்யும் தொழிலும் வேகமாக வளர்ந்து வருகின்றது..இங்கு சுமார் 15,000 இக்கு மேற்பட்ட சிறிய தொழிற்சாலைகள் உள்ளன..பெரும்பாலான தொழில்சாலைகள் ஒரு சிறிய அறையின் அளவை ஒத்தது..இன்னுமொரு வியத்தகு விடயம் என்னவென்றால் தாராவியின் வருடாந்த பொருளாதாரம் சுமார் 500 மில்லியன் டாலர்களாகும்....ஆனால் அங்கு வாழும் மக்களின் வாழ்க்கை தரமோ மிகுந்த பரிதாபதுகுரியது...





மழைகாலங்களில் தாரவி பெரும்பாலும் நீரில் மூழ்கியே காணப்படும்...இங்கு மழைநீர் வழிந்தோட வடிகால் வசதி கிடையாது....இன்னொமொரு முக்கிய பிரச்சனையாக கழிப்பறைகள் உள்ளன..இங்கு போதுமான கழிப்பறை வசதிகள் கிடையாது..2006ம் ஆண்டு கருத்து கணிப்பின் படி 1440 பேருக்கு ஒரு கழிப்பறையே உள்ளது...பெரும்பாலானோர் அருகில் உள்ள நதியிலே இயற்ட்கை கடன்களை கழிக்கின்றனர்..இதனால் இங்கு அடிக்கடி தொற்று நோய்கள் ஏற்படுகின்றன......மும்பையை வெளிநாட்டு நகரங்களுக்கு ஒப்பிட்டு பீலா விடும் அரசியல்வாதிகள் முதலில் தாரவி மக்களின் குறையை தீர்க்கட்டும்....அரசியல்வாதிகளுக்கு பண மாலை அணிவித்து அழகு பார்க்கும் அறிவிலிகள் இந்த கைவிடப்பட்ட மக்களை பற்றி சிந்தித்தால் எவ்வளவோ நல்லது...இந்திய அரசியல்வாதிகளுக்கு ஒரு வேண்டுகோள்,வறுமையை ஒழியுங்கள் பிறகு நீங்கள் தான் உலகின் வல்லரசு.........

Monday, April 19, 2010

அமெரிக்க ஜனாதிபதிகளின் அரிய இளவயது புகைப்படங்கள்........

நெட்டில் சிக்கியவை.....

Ronald Regan 12years old in 1929


Richard Nixon 4years old in 1917


Obama 3years old in 1965 with grandfather


Lyndon johonson 6months old in 1909


Jimmy carter 12years old in 1937


John F.Kennedy 1oyears old in 1927


Harry truman 6months old in 1884


Gerald ford 6years old in 1920


Franklin roosevelt 3years old in 1885


Dwight eisenhower 17years old in 1907


George bush 9years old in 1955 with parents


Senior bush 5years old in 1929


Bill clinton 5years old in 1952


Abraham lincon unknown age

Sunday, April 18, 2010

அமெரிக்கா VS ரசியா

இது ஒரு வில்லங்கமான பதிவு...

ரசியா மற்றும் அமெரிக்கா இடையே காலம் காலமாக போட்டி நிலவி வருவது எல்லோரும் அறிந்த விடயம்...இவ்விரு நாடுகளுக்கு இடேயிலான ஆயுத போட்டி மிக பிரபலமானது...இப்போட்டி மூலம் உருவானது தான் உலகின் இரு தலை சிறந்த தன்னியக்க துப்பாகிகள்...ரஷ்ய தயாரிப்பானAK47 மற்றும் அமெரிக்க தயாரிப்பான M16 ஆகிய துப்பாக்கிகள் உலகின் சிறந்த துப்பாகிகளாக கருத படுகின்றன....இத் துப்பாக்கிகள் பற்றிய ஒரு சிறிய அலசலே இந்த பதிவு

முதலில் AK47 பற்றிய ஒரு பார்வை

உலகில் மிக அதிகமாக பாவிக்கப்படும் துப்பாக்கியாக AK47 விளங்குகிறது...இதுவரை நூறு மில்லியனுக்கும் அதிகமான AK47 துப்பாக்கிகள் தயாரிகபட்டுள்ளன...உலகிலேயே மிக அதிகமானோரால் அடையாளம் காணக்கூடிய துப்பாக்கியும் இதுவாகும்..AK47இக்கு இருக்கும் என்னுமொரு சிறப்பு என்னவென்றால் உலகின் ஆயுத போராட்டங்களின் சின்னமாக இது கருத படுகிறது.....தீவிரவாதிகள் முதல் இராணுவம் வரையில் விரும்பப்படும் ஆயுதமாக இது விளங்குகிறது...மொசாம்பிக் நாட்டின் தேசிய கொடியில் AK47 இடம் பிடித்திருகிரதென்றால் பாருங்களேன்....

1947ம் ஆண்டு சோவியத் ஜுநியனை சேர்ந்த Mikhail Kalashnikov என்பவரால் வடிவமைகபட்டதே AK47 ஆகும்.(இத்துப்பாக்கியின் முதல் இரு எழுத்துகள் வடிவமைத்தவரின் பெயரையும் இலக்கம் வடிவமைக்கபட்ட ஆண்டையும் குறிக்கின்றது) இதன் இயக்கத்தை பார்ப்போமானால் இது உயர் அமுக்கத்தை உடைய வாயுவால் (Highly Pressurized Gas) இயங்கும் துப்பாக்கியாகும்..நிமிடத்துக்கு 600 ரவைகள் வரை சுடக்கூடிய இந்த துப்பாக்கி 4.3Kg நிறை உடையதாகும்...AK47 துப்பாகிக்கு 7.92x39mm அளவுடைய ரவைகள் பயன்படுத்த படுகின்றன..இதன் ஒரு மகசீனில் 20-30 வரையான ரவைகள் உள்ளன...இதனால் சுடும்போது அதன் தாக்கம் ஆகக்கூடியது 400m வரையே காணபடுகிறது... இத்துப்பாக்கியிலிருந்து புறப்படும் ஒரு குண்டின் சராசரி வேகம் 715m/s ஆகும்..

அடுத்து அமெரிக்க தயாரிப்பான M16ஐ பற்றி பார்த்தால் இது 1964 ம் ஆண்டு வியட்நாம் போர் காலபகுதியில் அறிமுகபடுத்த பட்டது..அன்று முதல் இன்று வரை அமெரிக்க துருப்புகளின் பிரதான ஆயுதமாக இது விளங்குகிறது..M16 பெரும்பாலும் மேலைத்தேய மற்றும் ஐரோப்பிய நாடுகளால் பயன்படுத்த படுகிறது...AK47 பெரும்பாலும் ஆசிய,ஆபிரிக்க நாடுகளால் பயன்படுதபடுகின்றது..

இன் இயக்கத்தை பார்த்தல் இதுவும் AK47 ஐ போல உயர் அமுக்கத்தை உடைய வாயுவால் இயங்குகிறது...நிமிடத்துக்கு 700-950 குண்டுகளை சுடவல்ல இந்த துப்பாகிக்கு 5.56x45mm அளவுடைய ரவைகள் பயன்படுத்த படுகின்றது... இத்துப்பாகியிலிருந்து வெளிப்படும் குண்டானது 975m/s வேகத்தில் பயணிக்கிறது..இதன் அதிகூடிய சுடுதூரம் 550m ஆகும். வழமையாக இதன் ஒரு மகசீனில் 20-30 ரவைகள் இருக்கும்..


இனி இவ்விரு துப்பாக்கிகளையும் ஒப்பிட்டு பார்த்தல் இரண்டுமே தனித்தன்மை உடையதாக காணபடுகிறது.M16 ஐ எடுத்து நோக்கினால் அதன் சுடுதிறன் AK47 ஐ காட்டிலும் அதிகமாக உள்ளது..காரணம் பாவிக்கப்படும் குண்டு AK47 ரவையில் காட்டிலும் பாரமானது,மற்றும் சிறந்த துப்பாக்கி குளிர்விக்கும் செயல்முறை என்பனவாகும்.. மேலும் M16 இன் மூலம் AK47 ஐ காட்டிலும் துல்லியமாக இலக்குகளை தாக்க முடியும்.AK47 இன் அனுகூலங்களை பார்த்தல் பாவிப்பதற்கு மிகவும் இலகுவானது....மேலும் M16 ஐ போல அடிக்கடி சுத்தம் செய்ய தேவை இல்லை(வியட்னாம் போரில் சுத்தம் செய்யாமல் போனதால் செயல் இழந்த M16 துப்பாக்கிகளினால் இறந்த வீரர்கள் பல) மேலும் இன் நம்பகத்தன்மை மிக வியப்பிற்குரியது. AK47 துப்பாக்கிகள் செயல் இழப்பது மிகவும் அரிது..இதனாலேயே எல்லோராலும் விரும்பி பயன்படுத்த படுகிறது.....எவளவு துப்பாகிகள் வந்தாலும் AK47இக்கு எப்பவுமே தனி மரியாதை உண்டு

ஐயோ சாமி நான் தீவிரவாதி இல்லிங்கோ

Friday, April 16, 2010

பில் கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால்?

பில் கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் விண்டோசை ஜன்னல்
என்றுஅழைத்திருப்பார்கள். அதன் மெனு அட்டவணை இவ்வாறாக அமைந்திருக்கும்.

Save = வெச்சிக்கோ
Save as = அய்ய! அப்டியெ வெச்சிக்கோ
Save All = அல்லாத்தியும் வச்சிக்கோ
Help = ஒதவு
Find = பாரு
Find Again = இன்னொரு தபா பாரு
Move = அப்பால போ
Mail = போஸ்ட்டு
Mailer = போஸ்ட்டு மேன்
Zoom = பெருசா காட்டு
Zoom Out = வெளில வந்து பெருசா காட்டு
Open = தெற நயினா
Close = பொத்திக்கோ
New = புச்சு
Old = பழ்சு
Replace = இத்த தூக்கி அத்ல போடு அத்த தூக்கி இத்ல போடு
Run = ஓடு நய்னா
Execute = கொல்லு
Print = போஸ்டர் போடு
Print Preview = பாத்து போஸ்டர் போடு
Cut = வெட்டு - குத்து
Copy = ஈயடிச்சான் காப்பி
Paste = ஒட்டு
Paste Special = நல்லா எச்ச தொட்டு ஒட்டு
Delete = கீச்சிடு
anti virus = மாமியா கொடுமை
View = லுக்கு உடு
Tools = ஸ்பானரு
Toolbar = ஸ்பானரு செட்டு
Spreadsheet = பெரிசிட்டு
Database = டப்பா
Exit = ஓடுறா டேய்
Compress = அமுக்கி போடு
Mouse = எலி
Click = போட்டு சாத்து
Double click = ரெண்டு தபா போட்டு சாத்து
Scrollbar = இங்க அங்க அலத்தடி
Pay Per View = துட்டுக்கு பயாஸ்கோப்பு
Next = அப்பால
Previous = முன்னாங்கட்டி
Trash bin = கூவம் ஆறு
Solitaire = மங்காத்தா
Drag & hold = நல்லா இஸ்து புடி
Do you want to delete selected item? = மேய்யாலுமே தூக்கிறவா?
Do you want to move selected item? = மெய்யாலுமே கடாசிடவா?
Do you want to save selected item? = மெய்யாலுமே வெச்சிக்கவா?
Abort, Retry, Ignore = இஸ்டம் இல்லாட்டி உட்டுடு
Yes, No, Cancel = இப்போ இன்னா சொல்லுற நீ?
General protection fault = காலி
Access denied = கை வச்ச... கீச்சுடுவேன்!
Unrecoverable error = படா பேஜார்பா
Operation illegal = பேமானி சாவு கராக்கி கஸ்மாலம்
Windows 98 = இதாமெ ஜன்னல் தொன்னித்தி எட்டு

Wednesday, April 14, 2010

இயற்கை-3

பொழுதுபோக்காக க்ளிக்கிய படங்கள்





















Tuesday, April 13, 2010

இயற்கை-2

பொழுதுபோக்காக க்ளிக்கிய படங்கள்


























Sunday, April 11, 2010

பெர்முடா முக்கோணம்


உலகின் புரிந்து கொள்ள முடியாத ஒரு மர்மங்களில் பெர்முடா முக்கோணமும் ஒன்று..பெர்முடா,ப்ளோரிடா மற்றும் போர்டேரிகோ ஆகிய பிரதேசங்களுக்கு இடைப்பட்ட முக்கோண வடிவ கடல் பகுதியே பெர்முடா முக்கோணம் எனபடுகிறது.. இந்த பகுதியினூடாக செல்லும் கப்பல் மற்றும் விமானகளில் பல மாயமாக மறைவதும்,விபத்துகுள்ளவதும் புரிந்து கொள்ளமுடியாத புதிராக உள்ளது..


இந்த மர்மம் வெளிச்சத்துக்கு வந்தது ம் 1945 ஆண்டு நடந்த ஒரு சம்பவம் மூலம் ஆகும்..1945ம் ஆண்டு பயிற்சிக்காக புறப்பட்டு சென்ற அமெரிக்க கடற்படையை சேர்ந்த flight19 எனும் விமானம் மாயமாக மறைந்து போனது...முதலில் காலநிலை காரணமாக விமானம் விபத்துக்குள்ளகியிருக்கலாம் என்றே கருதப்பட்டது..ஆனால் ஆய்வுகளின் படி அன்று வானிலை மிக அமைதியாக இருந்ததாகவும்,விமானத்தை ஒட்டிய விமானி மிகவும் அனுபவம் வாய்ந்த ஒருவர் என்றும் கூறப்பட்டது..காணாமல் போன விமானத்தை தேடி 13 பேர் கொண்ட ஓர் மீட்பு குழு இன்னுமொரு விமானத்தில் புறப்பட்டது....ஆனால் பயிற்ச்சி விமானம் போலவே மீட்பு விமானமும் மாயமாக மறைந்து போனது..இன்று வரை அந்த இரு விமானங்களுக்கும் அதில் பயனித்தவர்களுகும் என்ன நடந்தது என்பது யாருக்கும் தெரியாது..மூன்று வருடங்கள் கழித்து 32 பயணிகளுடன் போடேரிகோவிலிருந்து மியாமி நோக்கி புறப்பட விமானம் மாயமாக மறைந்தது..இன்றுவரை அதன் சிதைவுகள் கூட கண்டுபிடிக்கப்படவில்லை..இதே வருடம் அசாரோசில் இருந்து பெர்முடா நோக்கி புறப்பட்ட விமானம் மாயமாக மறைந்து போனது..பின்பு 1949 ம் ஆண்டு பெர்முடாவில் இருந்து ஜமெயக்கா நோக்கி புறப்பட்ட விமானம் காணாமல் போனது...இதே போல் 1963ம் ஆண்டு 39 பேருடன் சென்ற கப்பல் ஒன்று இந்த பகுதியில் மாயமாய் மறைந்தது...பின்பு 1969 ம் ஆண்டு இந்த முக்கோணத்தின் மீது பறந்து கொண்டிருந்த ஒரு விமானத்தின் ரேடியோ தொடர்பு அறுந்து போய் பின்பு அதன் கெதி யாருக்கும் தெரியாமல் போனது..




இந்த மர்மங்களுக்கு பலர் பலவிதமான விளக்கம் கொடுத்தனர்..சிலரின் கருத்துப்படி இந்த கடல் பகுதியில் ராட்சச சுழிகள் இருப்பதாகவும் அவைதான் கப்பல்களை விழுங்குவதாகவும்,வேறு சிலரோ இந்த பகுதியில் எதோ ஒரு அமானுஷ்ய சக்தி உலாவுவதாகவும் அவைதான் இந்த கானாமல்போதல்களுக்கு காரணம் எனவும் கூறுகின்றனர்...ஆனால் ஆராய்சியாளர்களின் கருத்து வேறுமாதிரி உள்ளது....சில இயற்கை நிகழ்வுகள் தான் இதற்கு காரணம் என்பதே இவர்களின் வாதமாகும்..இந்த முக்கோண பகுதியில் மின்காந்த புலம் ஏனைய இடங்களை விட வலுவாக இருப்பதாக ஆராய்சியாளர்கள் கூறுகின்றனர்....வலுவான மின்காந்த புலத்தால் கப்பல் மற்றும் விமானங்களின் திசையறி கருவிகள் குழப்பமடைந்து அவை வேறு திசையில் பயணித்து விபத்துக்குள்ளவதாக விஞ்ஜானிகள் தெரிவிகின்றனர்..மேலும் கடலுக்கு அடியில் இருந்து வெளிப்படும் மெதேன் வாயு காரணமாக தண்ணீரின் அடர்த்தி குறைவடைந்து கப்பல்கள் மூழ்குவதாகவும் தெரிவிக்க படுகிறது....யார் என்ன கூறினாலும் பெர்முடா முக்கோணம் பல மர்மங்களை கொண்ட பயங்கர இடமாகவே இன்றும் கருத படுகின்றது....அந்த பகுதில் என்ன நடக்கிறதென்பது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்...

பின் குறிப்பு: அமானுஷ்ய சக்திகள் உலாவும் என நம்பப்படும் இடங்களில் மின்காந்த புலம் வலுவாக இருக்கும் என்பது விஞ்ஜான ரீதியாக நிருபிக்கப்பட்ட ஒன்று...