Search This Blog

Saturday, May 15, 2010

வாழ்க்கை வாழ்வதற்க்கே.......

உனக்குள் இருக்கும் மிருகத்தை அடக்கினால்
உனக்குள் ஒளிந்திருக்கும் கடவுள் தெரிவார்..

பொறாமை ஒழி,பொறுமை பிறக்கும்
தர்மம் செய்,இரக்கம் சுரக்கும்....

உண்மையாய் இரு,நம்பிக்கை பிறக்கும்
ஒருவரை மட்டும் நேசி,வாழ்க்கை சிறக்கும்..

சமூகம் ஒரு கண்ணாடி,
நீ அதற்கு கொடுப்பதை தான் அது உனக்கு திருப்பி கொடுக்கும்....

நண்பனாய் இரு,ஆனால் அடிமையாய் இருக்காதே
எதிரியாய் இரு,ஆனால் துரோகியாய் இருக்காதே....

வெகுளியாய் இரு,ஆனால் முட்டாளாய் இருக்காதே
பெருமை கொள்,ஆனால் கர்வம் கொள்ளாதே....

தடியால் அடி,ஆனால் சொல்லால் அடிக்காதே
பணிவாய் நட,ஆனால் இழிச்சவாயாய் இருக்காதே....

நாத்திகம் பேசு,ஆனால் கோவிலை உடைக்காதே
கடவுளை நேசி,ஆனால் பகுத்தறிவை இழக்காதே.....

காதல் கொள்,ஆனால் காமம் கலக்காதே
எங்கு சென்றாலும் தமிழ் கலாசாரம் மறக்காதே....

No comments:

Post a Comment