Search This Blog

Saturday, July 31, 2010

பயன் தரும் மருத்துவ தகவல்கள்-4

1.ரத்த அழுத்தமா… கூல் கூலா தண்ணி குடிங்க

நிறைய தண்ணீர் குடிப்பதால் பல்வேறு பலன்கள் இருப்பது நமக்குத் தெரியும். லேட்டஸ்டாக, ரத்த அழுத்தத்தை சீராக வைக்க, நரம்பு உறுதி, சக்தி அதிகரிப்புக்கு தண்ணீர் உதவுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவில் உள்ளது வண்டர்பில்ட் பல்கலைக்கழக மருத்துவ மையம். அதன் ஆராய்ச்சியாளர்கள் குழு, தேவையான அளவு தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் மருத்துவ நன்மைகள் பற்றி ஆராய்ந்தனர். தண்ணீர் குடித்ததும் அது ரத்த தமனிகளில் அடைப்புகளை கரைந்து ஓடச் செய்வது ஆய்வில் தெரிய வந்தது. அதன்மூலம், உடலில் ரத்த அழுத்தம் சீராக பராமரிக்கப்படும்.

எனவே, ரத்த அழுத்த நோயாளிகள் மயக்கம், தலைசுற்றல், வாந்தி உணர்வு போன்ற அறிகுறிகளை உணர்ந்தால், ஒரு டம்ளர் குளிர்ந்த தண்ணீர் குடிப்பது நல்லது. அத்துடன், நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டையும் தண்ணீர் உறுதிப்படுத்துகிறது. அன்றாட வேலைகளின்போது ஏற்படும் சக்தி இழப்பை குறைக்கிறது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இதுபற்றி வண்டர்பில்ட் பல்கலைக்கழக மருத்துவ மைய பேராசிரியர்கள் கூறுகையில்,

‘‘ரத்த அழுத்தம் குறித்த விழிப்புணர்வை தண்ணீர் ஏற்படுத்துவதும், நரம்பு மண்டலத்தை உறுதியாக்குவதும் தெரிய வந்துள்ளது. இந்த பிரிவில் கடந்த 10 ஆண்டுகளாக நடந்த ஆராய்ச்சிகளுக்கு வெற்றி கிடைத்துள்ளது’’ என்றனர்.


2.புற்று நோயாளிகளு‌க்கு உதவு‌ம் யோகாசனம்

உடலை ஆரோ‌க்‌கியமாகவு‌ம், பு‌த்துண‌ர்‌ச்‌சியாகவு‌ம் வை‌த்து‌க் கொ‌ள்வ‌தி‌ல் யோகாசன‌த்‌தி‌ற்கு ஈடு இணையே ‌கிடையாது. அ‌ப்படி‌ப்ப‌ட்ட யோகாசன‌ம் செ‌ய்வதா‌ல் பு‌ற்று நோயா‌ளிக‌ள் ந‌ல்ல தூ‌க்க‌த்தை‌ப் பெற முடியு‌ம் எ‌ன்‌கி‌‌ன்‌றன‌ர் ஆரா‌ய்‌ச்‌சியாள‌ர்க‌ள்.
புற்று நோயாளிகள் யோகாசனம் செய்தால் நன்றாக தூக்கம் வரும், உட‌ல் களை‌ப்பு மா‌றி அதிக சக்தி கிடைக்கும் என்று ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. குறிப்பாக மார்பக புற்று நோய்க்கு ஹீமோ தெரபி சிகிச்சை பெற்றவர்களுக்கு இந்த யோகாசனம் நல்ல பலனை அளித்ததாக கண்டறிய பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள ரோச்செஸ்டர் மருத்துவ மையம் என்ற பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் 400-க்கும் மேற்பட்டவர்களிடம் இந்த ஆய்வை நடத்தினார்கள்.

குறிப்பாக மார்பக புற்று நோய்க்கு ஹீமோ தெரபி சிகிச்சை பெற்றவர்களிடம் ஆய்வு மேற்கொண்டனர். ஒரு பிரிவினர் வாரம் 2 முறை வீதம் ஒரு மாதத்துக்கு யோகாசனம் செய்ய வைத்து ஆய்வு நடத்தப்பட்டது. அவர்களுக்கு நன்கு தூக்கம் வந்ததாகவும், அதிக சக்தியும், புத்துணர்ச்சியும் பெற்றதாகவும் தெரிய வந்தது.

இதனால் அவர்கள் தூக்க மாத்திரை உட்கொள்வதை விட்டு விட்டதையு‌ம் ஆரா‌ய்‌ச்‌சியாள‌ர்க‌ள் கு‌றி‌ப்‌பி‌ட்டு‌ள்ளன‌ர். யோகாசனம் செய்யாத புற்று நோயாளிகளுக்கு தூ‌க்க‌ம் வருவ‌தி‌ல் ‌பிர‌ச்‌சினையு‌ம் இரு‌ந்தது, பு‌த்துண‌ர்‌ச்‌சி இ‌ல்லாம‌ல் எ‌ப்போது‌ம் களை‌‌ப்பு‌ற்று‌ம் காண‌ப்ப‌ட்டன‌ர்.

யோகாசன‌ம் செ‌ய்வதா‌ல், பு‌ற்று நோ‌ய் பா‌தி‌த்தவ‌ர்க‌ள் தூ‌க்க‌ம் வருவத‌ற்கு தூ‌க்க மா‌த்‌திரை சா‌ப்‌பிட வே‌ண்டிய அவ‌சிய‌ம் வராது எ‌ன்று‌ம், த‌ங்களது நோ‌யினா‌ல் ஏ‌ற்ப‌ட்ட உட‌ல் களை‌ப்பு‌ம், மன அழு‌த்தமு‌ம் குறை‌கிறது எ‌ன்று‌ம் பெ‌ண் ஆரா‌ய்‌ச்‌சியாள‌ர் கரெ‌ன் முடியா‌ன் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.


3.பதப்படுத்தப்பட்ட இறைச்சியை உட்கொள்வதனால் அதிக இதய நோய் ஏற்படுகிறது

பதப்படுத்தப்பட்ட இறைச்சி வகைகளை உட்கொள்வதனால் அதிகளவு இருதய நோய் ஏற்படுவதாக நவீன மருத்து ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
சொசேஜஸ் போன்ற பதப்படுத்தப்பட்ட இறைச்சி வகைகளினால் அதிகளவு இருதய நோய் ஏற்படுவதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

எவ்வாறெனினும், பச்சை இறைச்சி வகைகளினால் அதிகளவு பாதிப்பு ஏற்படாது எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஹாவார்ட் பல்கலைக்கழக மருத்துவ ஆய்வாளர்ளினால் ஒரு மில்லியன் மக்களிடம் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

நாள் தோறும் 50 கிராம் அளவு பதப்படுத்திய இறைச்சியை உணவில் சேர்த்துக்கொள்ளும் நபர்களுக்கு நீரிழிவு நோயும் ஏற்படக் கூடிய அபாயம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எனினும், பதப்படுத்தப்படாத பச்சை இறைச்சி வகைகளான மாடு, ஆடு, பன்றி போன்ற இறைச்சி வகைகளை உட்கொள்வோருக்கு நீரிழிவு நோய் ஏற்படக் கூடிய அபாயம் குறைவாகவே காணப்படுகின்றது.

இரண்டு இறைச்சி வகைகளிலும் ஒரேயளவு கொழும்பு சத்தே காணப்படுவதாகத் தெரவிக்கப்படுகின்றது.


4.அதிக வேலை மூளைக்கு பாதிப்பு!

இன்றைய சமுதாயத்தில் சொந்தமாக தொழில் செய்பவர்களாக இருந்தாலும் சரி… அடுத்தவர்களிடம் வேலை பார்ப்பவர்களாக இருந்தாலும் சரி… குறிப்பிட்ட அளவில்தான் உழைக்க வேண்டும். வாழ்க்கையே உழைப்பு ஆனால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்..
ஒரு வாரத்திற்கு 40 மணி நேரம்தான் உழைப்புக்கு செலவிட வேண்டும். உடல் உழைப்பை வெளிப்படுத்தி செய்யும் வேலையாக இருந்தாலும், சிந்தித்து செய்யும் வேலையாக இருந்தாலும் இந்த கால அளவை தாண்டி ஒருவர் வேலை செய்வது அவருக்கு நல்லதல்ல என்கிறது இந்த ஆய்வு.

வாரத்திற்கு 40 மணி நேரத்தையும் தாண்டி வேலை செய்தால், அதனால் ஏற்படும் பாதிப்பு உடனே தெரியாது என்று கூறியுள்ள ஆய்வை மேற்கொண்டவர்கள், நடுத்தர வயதை கடந்த பின்புதான் இந்த பாதிப்பு உங்களுக்கு தெரிய வரும். குறிப்பாக, மூளையின் சுறுசுறுப்பு குறைய ஆரம்பிக்கும் என்றும் எச்சரிக்கிறார்கள்.

அவர்கள் மேலும் கூறும்போது, சாப்ட்வேர் நிறுவனங்களில் வாரத்திற்கு 5 நாட்கள் வேலை செய்பவர்கள் தினமும் 10 மணி நேரத்துக்கு குறையாமல் வேலை செய்கின்றனர். இதனால்தான் இவர்கள் எளிதில் சோர்வடைகின்றனர், மன அழுத்தத்துக்கும் ஆளாகின்றனர். அதில் இருந்து விடுபடத்தான் விடுமுறை நாட்களை ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்று கழிக்கின்றனர் என்றனர்.

நீங்களும் 40 மணி நேரத்தையும் தாண்டி, அலுவலகத்தையே கட்டி அழுபவர் என்றால் இப்போதே உஷாராகிவிடுங்கள். இல்லையென்றால்… பிரச்சினை உங்களுக்குத்தான்!

Source:www.z9tech.com

1 comment:

  1. இனிய நண்பர் தின வாழ்த்துகள்!!

    ReplyDelete