Search This Blog

Sunday, June 27, 2010

பயன் தரும் மருத்துவ குறிப்புக்கள்-2

1.மருத்துவ குணம் நிறைந்த மஞ்சள் தூள்

இயற்கையில் நம் முன்னோர் சமையலில் பயன்படுத்திய பல பொருட்களில் மருத்துவ குணங்கள் நிறைந்திருப்பது, பின்னாளில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அந்த வகையில் சமையலில் அன்றாடம் நாம் பயன்படுத்தும் மஞ்சள் தூளின் மருத்துவ குணங்கள் சிலவற்றை இதில் பார்ப்போம். பொதுவாக மஞ்சள் நிறம் ஏற்படவும், உணவுப் பதார்த்தங்கள் கலராக இருப்பதற்குமே மஞ்சள் பயன்படுத்தப்படுவதாக பலரும் அறிவோம். ஆனால், அவற்றின் செயல்பாடு மிகவும் ஆச்சரியப்பட வைக்கும்.

மசாலாவில் மஞ்சள் நிறத்தைக் கொண்டுவருவதற்கு மஞ்சள் தூள் பயன்படுத்தப்படுகிறது.

`அல்ஜைமர்' நோய் உடையவர்களுக்கு மூளையில் இருக்கும் அழுக்குகளை நீக்குவதில் மஞ்சள் தூள் பெரும் பங்காற்றுகிறது. மஞ்சள் தூளில் இருக்கும் குர்குமின் (curcumin) என்ற பொருள் இதற்கு உதவுவதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

இந்திய மருத்துவத்தில் வெகுகாலமாக பயன்படுத்தப்படும் மஞ்சள்தூளானது புற்றுநோய்க்கும், மல்டிபிள் செலெரோஸிஸ், சிஸ்டிக் பைபரோஸிஸ் போன்ற வியாதிகளுக்கும் அருமருந்தாக செயலாற்றி வருகிறது.

மஞ்சளில் உள்ள குர்குமின், ஒரு ஆன்டி-ஆக்ஸிடெண்டும், ஆன்டி இன்ஃப்ளமேட்டரி எனப்படும் எரிச்சல் குறைக்கும் மருந்தும் ஆகும். இது மூளையில் அமைலோய்ட் சேர்வதினால் உருவாகும் எரிச்சலையும், அதனால் உருவாகும் செல் உடைவுகளை சரிப்படுத்தவும் செய்கிறது.

முடக்குவாதம் (arthritis), இதயத்தில் பாதிப்பு ஏற்படுவதையும் குர்குமின் தடுக்கக்கூடும் என்றும் ஆராய்ச்சி முடிவுகள் மூலம் தெரிய வந்துள்ளது.


2.மிள‌கி‌ன் மரு‌த்துவ‌ப் பய‌ன்பாடு எ‌ன்ன?

மிளகு ப‌ல்வேறு மரு‌த்துவ‌ குண‌ங்களை‌க் கொ‌ண்டது. அத‌ன் மரு‌த்துவ‌ப் பய‌ன்பாடுக‌ள் எ‌ன்ன எ‌ன்பது ப‌ற்‌றி பா‌ர்‌க்கலா‌ம். ‌மிளகு, வெ‌ல்ல‌ம், பசுநெ‌‌ய் ஆ‌கிய மூ‌ன்றையு‌ம் சே‌ர்‌த்து லே‌‌கியமாக ‌கிள‌றி நெ‌ல்‌லி‌க்கா‌ய் அளவு சா‌ப்‌பி‌ட்டுவர தொ‌ண்டை‌ப் பு‌ண் குணமாகு‌ம்.

‌சி‌றிது ‌சீரக‌ம், 5 ‌மிளகு, ‌கொ‌த்தும‌ல்‌லி ‌சி‌றிது, க‌றிவே‌ப்‌பிலை ஆ‌கியவ‌ற்றை அரை‌த்து ‌சி‌றிய உருணடைகளா‌க்‌கி உல‌ர்‌த்‌தி‌க் கொ‌ள்ளவு‌ம்.

தேவையான போது இ‌தி‌ல் ஒரு உரு‌ண்டையை க‌ற்பூரவ‌ல்‌லி இலை‌ச் சா‌ற்‌றி‌ல் கல‌ந்து உ‌ட்கொ‌ள்ள கொடு‌க்க குழ‌ந்தைகளு‌க்கு ஏ‌ற்படு‌ம் ச‌ளி‌த் தொ‌ல்லை தீரு‌ம். ஈளை ம‌ற்று‌ம் இரும‌ல் இரு‌ப்பவ‌ர்க‌ள் காலை‌யி‌ல் எழு‌ந்தது‌ம் கற‌ந்த பசு‌ம்பாலை கா‌ய்‌ச்‌சி, அ‌தி‌ல் ‌‌சி‌றி‌து ‌மிளகையு‌ம், ம‌ஞ்சளையு‌ம் பொடியா‌க்‌கி கல‌ந்து குடி‌த்து வர 3 நா‌ளி‌ல் குண‌ம் ‌கி‌ட்டு‌ம்.


3.ரத்த ஓட்டத்தை சீராக்கும் தக்காளி

சில‌ர் ப‌ல்வேறு உட‌ல் உபாதைகளு‌க்காக ஆஸ்பிரின் மாத்திரை எடுத்துக்கொள்வது வழக்கம். அந்த மாத்திரையை சாப்பிட்டவுடன் அவற்றில் இருந்து உடனடியாக நிவாரணம் கிடைக்கும்.

ஆனால், இந்த ஆஸ்பிரின் மாத்திரைக்கு பதிலாக தக்காளியை சாப்பிடலாம் என்று ஒரு மருத்துவ ஆய்வு கூறு‌கிறது.

தக்காளி விதையில் இயற்கையாக ஜெல் போன்ற திரவம் காணப்படுகிறது. அந்த திரவமானது ரத்தம் உறைவதை தடுப்பதில் முக்கிய பங்கு வகிப்பதும், சீரான ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதும் இந்த ஆய்வில் மேலும் தெரிய வந்துள்ளது.

ஆ‌ய்வு கு‌றி‌த்து கூறுகை‌யி‌ல், ரத்த ஓட்டம் சீராகுவதற்காக லட்சக்கணக்கான மக்கள் சிறிய அளவில் தினசரி ஆஸ்பிரின் மாத்திரையை பயன்படுத்தி வருகின்றனர்.

ஆனால் அது, வயிற்றில் ரத்தக் கசிவை ஏற்படுத்தி அல்சர் ஏற்பட வழிவகுக்கும் தன்மை உடையது. ஆனால் தக்காளி சாப்பிடுவதால் அதுபோன்ற பக்க விளைவுகள் ஏற்படாது என்று தெரிவித்தனர்.


4.காசநோ‌ய்‌க்கு மரு‌ந்தாகு‌ம் தூதுவளை

தூதுவளை இலைகளை நிழலில் உலர்த்திக் காயவைத்து இடித்துப் பொடியாக்கி, ஒரு தேக்கரண்டி பொடியை 1 டம்ளர் பசும்பாலில் கல‌ந்து ‌தினமு‌ம் காலையில் மட்டும் குடித்து வர நாவறட்சி, கபநீர், மூட்டு வலி, காசநோய் குணமாகும்.

தூதுவளை இலையை நெய்யில் வதக்கி துவையலாகவோ, கடைந்தோ உண்டு வரக் கபக் கட்டு நீங்கி உடல் பலம் பெறும்.

தூதுவளை இலையைச் சாறு பிழிந்து அதேயளவு நெய்யில் காய்ச்சி 1 தேக்கரண்டியளவு 2 வேளை குடித்து வர, எலும்புருக்கிக் காசம், மார்புச் சளி உடனே நீங்கும்.

தூதுவளைக் காயை நிழலில் உலர்த்திக் காயவைத்து தயிர், உப்பு சேர்த்து பதப்படுத்தி எண்ணெயில் வறுத்து உணவுடன் உண்டு வர மனநலம் பாதிப்பு, இதய பலவீனம், மலச்சிக்கல் குணமாகும்.

தூதுவளைப் பூக்கள் 10 எடுத்து 1 டம்ளர் பாலில் காய்ச்சி வடிகட்டி, சிறிது சர்க்கரை சேர்த்து 48 நாட்கள் இருவேளை குடித்து வர, தாது விருத்தி, உடல் பலம், முகவசீகரம் பெறலாம்.

source:www.pathivu.com

No comments:

Post a Comment