Search This Blog

Sunday, June 27, 2010

டொராண்டோவில் களேபரம்...

ஜூன் 26ம் திகதி கனடாவின் டொரோண்டோ நகரில் இடம்பெற்ற ஜி20 மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக நடைபெற்ற ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் பெரும் கலவரம் வெடித்தது..
சுமார் பத்தாயிரத்துக்கும் அதிகமானோர் கலந்துகொண்ட ஊர்வலத்தில் திடீரென கலவரம் வெடித்ததில் டொராண்ரோ நகரமே அல்லோகல பட்டது.
கலவரத்தில் ஈடுபட்டவர்கள் வர்த்தக நிலையங்களின் கண்ணாடிகளை அடித்துநொறுக்கினர்..பல போலிஸ் கார்கள் தீப்பற்றி எரிந்தன..இதற்கெல்லாம் காரணம்
பிளக் பிளாக் எனும் அமைப்பு என்று போலிஸ் தரப்பு தெரிவிக்கின்றது...பெருமளவில் கலக்கம் அடக்கும் போலீசார் குவிக்கப்பட்டும் கலவரம் கட்டுக்கு அடங்கவில்லை..கலவரகாரர்கள் மாநாடு நடைபெறும் கட்டடத்தை சுற்றி அமைக்கப்பட்ட பாதுகாப்பு வேலியை தகர்க்க முற்பட்ட போதும் அது கைகூடவில்லை..
இதனால் ஆத்திரமடைந்த ஆர்பாட்டக்காரர்கள் அதிக வன்முறையில் ஈடுபட்டனர்..இதையடுத்து மேலதிக போலீசார் வரவளைக்கப்பட்டனர்..சுமார் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட
போலீசார் கண்ணீர் புகை பிரயோகம் செய்து கலவரத்தை அடக்க பெரும்பாடுபட்டனர்..மதியம் தொடங்கிய கலவரம் சுமார் 12 மணிநேரமாக நள்ளிரவு வரையும் தொடர்ந்தது..இறுதியாக கிடைத்த தகவலின் படி சுமார் 130 பேர் கைதுசெய்ய பட்டுள்ளனர்..மாநாடு நாளையும் நடை பெற இருப்பதால் நாளையும் கலவரம் வெடிக்கலாம் என பரவலாக எதிர்பார்கபடுகிறது...இந்த மாநாட்டின் பாதுகாப்பு செலவீனம் சுமார் ஒரு பில்லியன் டாலர்களாகும்..

கலவரத்தின் சில காட்சிகள் இதோ...











Photos in courtesy of Canadian Press

No comments:

Post a Comment