Search This Blog

Tuesday, August 3, 2010

கருப்பு,மஞ்சள்,சிவப்பு-ஒரு திகில்படம்..

வீட்ல இருக்க போர் அடிக்குதே என்று யூடுபில் எழுந்தமானமாக சில விடியோக்களை அலசிக்கொண்டிருந்தேன்...அப்போது எதேச்சையாக சிக்கியது இந்த வீடியோ..ஒரு தமிழ் குறும்படம்...மெகா பட்ஜெட் படங்களே படுசொதப்பலாக வெளிவரும் இந்த காலத்தில் குறும்படம் என்னத்த கிழிக்கபோது என்ற எண்ணத்துடன் வீடியோவை க்ளிக்கினேன்...வெறும் பதினோரு நிமிட வீடியோதான்..தொடங்கியது முதல் முடியும்வரை திரையை விட்டு கண் அகலவில்லை.. இருக்கையின் நுனிக்கே என்னை தள்ளிய ஒரு திகில்படம் இது..கதை என்று பார்த்தால் மூன்று நண்பர்கள் கோபமாக ஒரு அறைக்குள் நுழைகிறார்கள்..கல்லூரியில் படிக்கும் சக மாணவனை அடித்தது தொர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம்..அதில் ஒருவன் அடிவாங்கியவனின் பையை கூடவே எடுத்து வந்துவிட்டான்...மூவரும் பையை பிரிக்கின்றனர்..பையின் உள்ளே குங்குமம் ,பொம்மைகள்,தகடுகள்,ஊசி, ஒரு புத்தகம் என அமானுஷ்யமான பொருட்கள் இருக்கின்றன..மூவருமாக சேர்ந்து அந்த புத்தகத்தை திறந்து வாசிக்கின்றனர்..அதை வாசிக்க வாசிக்க நடைபெறும் திகில் சம்பவங்களே மீதிகதை..எதிர்பாராத முடிவுடன் முடிகிறது படம்.. பின்னணி இசை பின்னி எடுக்கிறது..ஓர் ஆங்கில திகில்படம் பார்த்த அனுபவம்..பதினோரு நிமிடத்திற்குள் ஒரு முழுநீள திகில் படம் பார்த்த அனுபவத்தை தந்த இந்த வித்தியாசமான முயற்சி மிகவும் பாராட்டத்தக்கது...

இதோ அந்த திகில் பட வீடியோ ...

2 comments:

  1. thanx for sharing it. its really nice

    ReplyDelete
  2. கருத்துக்கு நன்றி நண்பரே...

    ReplyDelete