Search This Blog

Sunday, August 29, 2010

மேட்ச் பிக்சிங்கும் மாட்டிக்கொண்ட பாகிஸ்தானும்...

பாகிஸ்தான் அணிக்கும் சர்ச்சைக்கும் எப்பவுமே தூரம் கிடையாது..வீரர்களின் நடத்தைகளால் அதிகம் வறுபட்ட அணிஎன்றால் அது பாகிஸ்தான் தான்...கடைசியாக இங்கிலாந்து அணிக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியின் போதே இவர்களின் வண்டவாளம் தண்டவாளம் ஏறியிருக்கிறது.. பத்திரிகை நிருபர் ஒருவர் சூதாட்ட முகவராக நடித்து இந்த உண்மைகளை வெளிகொனந்திருக்கிறார்.மாசர் மஜீத் என்ற நபரிடமே அந்த பத்திரிகை நிருபர் சூதாட்ட முகவராக நடித்து பேரம் பேசியிருக்கிறார்...சுமார் 150000 பவுண்டுகள் வரை பேரம் பேசப்பட்டதாக கூறபடுகிறது....ஒரு நோ பால் போடுவதற்கு பத்தாயிரம் பவுண்டுகள் வரை வாங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன..இந்த சர்ச்சையில் 7முக்கிய வீரர்கள் சம்பந்தபட்டிருக்கிரார்கள்...பாக்கிஸ்தான் கப்டன் சல்மான் பட்,வேகபந்து வீச்சாளர்களான முகமது ஆசிப் மற்றும் முகமது ஆமிர் ஆகியோரின் தலைகளே தற்போது உருளுகின்றன..கிணறு வெட்ட போய் பூதம் கிளம்பியது போல இந்த விடயத்தை கிளற கிளற இன்னும் எத்தனை தலைகள் உருள போகின்றனவோ தெரியவில்லை..ஒரு காலத்தில் கனவான்களின் விளையாட்டாக கருதப்பட்ட கிரிக்கெட் தற்போது களவாணிகளின் விளையாட்டாக மாறிவருவது மிகவும் வருந்ததக்கது...

இதோ அந்த திடுக்கிடும் வீடியோ.....



மேலதிக விபரங்களுக்கு...
http://www.newsoftheworld.co.uk/news/924349/Cricket-in-the-dock-as-we-expose-betting-scandal-England-Pakistan-Test.html

2 comments: