Search This Blog

Tuesday, September 21, 2010

இலங்கையில் வேரூன்றும் தலிபானிசம்....

நடைபெற்ற உண்மை சம்பவங்களை வைத்து ஊகிக்கப்பட்ட ஒரு கட்டுரையே இது..


அண்மையில் இந்தியாவில் கைதான 29வயதான மிர்ஸா ஹிமாயட் பெய்க் எனும் நபர் கொடுத்த திடுக்கிடும் வாக்குமூலம் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது...பூனேயில் உள்ள ஜேர்மன் பேக்கறி குண்டு வெடிப்பு வழக்கில் கைதான லஸ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்த இவர் கூறிய தகவல் தான் என்ன? இந்த தாக்குதலுக்கு இவர் இலங்கையில் பயிற்ச்சி எடுத்து கொண்டமையே அந்த தகவலாகும்... ...இவளவு காலமும் அண்டை வீட்டு பாகிஸ்தானை கண்ணில் எண்ணெய் ஊற்றாத குறையாய் கவனித்து வந்த இந்தியாவுக்கு தன கொல்லைபுறம்(இலங்கை) வழியாக தீவிரவாதம் ஊருவியுள்ளமை பேரதிர்ச்சியாக இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை... இலங்கையில் இஸ்லாமிய தீவிரவாதிகளின்
ஊடுருவலின் பின்னணி என்ன என்பதை பற்றி சிறிது சிந்தித்து பார்ப்போம்..

இலங்கையில் ஜிஹாத் என்பது எண்பதுகளின் நடுப்பகுதிகளிலேயே ஊடுருவிவிட்டது..குறிப்பாக இலங்கையின் கிழக்குபகுதிகளில் முஸ்லிம்கள்
செறிந்து வாழும் பிரதேசங்களில் இஸ்லாமிய ஆயுத குழுக்களின் நடமாட்டம் பற்றி அப்பப்போ பத்திரிகைகளில் செய்தி வெளிவருவது உண்டு.. அல்கைதாவுடன் தொடர்புடைய லஸ்கர் இ தொய்பா இந்தியாவுக்கு எதிரான செயற்பாடுகளை இலங்கையில் இருந்து செய்வதற்கு பல காரணங்கள் உண்டு.. 2006ம் ஆண்டு இலங்கையில் அப்போது பாகிஸ்தானிய தூதுவராக இருந்த பஷீர் வாலி முகம்மது மீது நடத்தப்பட்ட கிளேமோர் தாக்குதல் எல்லோருக்கும் தெரியும்.அதில் முகம்மது மயிரிழையில் உயிர்தப்பினார்...ரோ உளவாளிகள் இந்த தாக்குதலை நடத்திவிட்டு விடுதலை புலிகள் மீது பழியை போட்டனர்... மூன்றாவது நாடொன்றில் தன்மீது நடத்தப்பட்ட தாக்குதலை பாகிஸ்தான் சற்றும் எதிர்பார்கவில்லை..இந்த சூழ்நிலையில் தான் பாகிஸ்தான் அரசு இலங்கை அரசுடன் ஒரு இரகசிய ஒப்பந்தத்தை மேற்கொண்டது..அப்போது மாவிலாறு பிரச்னையில் இருந்த ராஜபக்ச சகோதரர்கள் இதற்கு ஒப்புக்கொண்டனர்..அந்த ஒப்பந்தம் என்னவென்றால் "இந்தியாவுக்கு எதிரான செயற்பாடுகளை இலங்கையில் இருந்து செய்வதற்கு பாகிஸ்தானிய புலனாய்வு துறைக்கு இலங்கை இடமளிக்க வேண்டும்,இதற்கு கைமாறாக விடுதலை புலிகளுக்கு எதிரான போரில் பாகிஸ்தான் இலங்கைக்கு உதவி செய்யும்..."..

இஸ்லாமிய தீவிரவாதிகளை பாகிஸ்தான் உளவுத்துறை வளர்ப்பது உலகறிந்த விடயம்...மேலும் இலங்கை அரசு உள்ளநாட்டு பிரச்னையில் இந்தியாவின் தலையீட்டை விரும்பவில்லை..காரணம் தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் வலுப்பெறும் புலிஆதரவு கொள்கை...இந்த மாதிரியான ஒரு நிலையில் இலங்கை அரசுக்கு இந்தியாவை காட்டிலும் பாகிஸ்தானே முக்கியம்..ஒருவேளை இந்தியா இலங்கைக்கு எதிராக திரும்பினால் பாகிஸ்தானை வைத்து போராடலாம் என்பதே ராஜபக்சவின் திட்டம்.. ஒப்பந்தத்தின் படி பாகிஸ்தான் புலனாய்வுத்துறையின் தலைமையில் இஸ்லாமிய தீவிரவாதிகள் இலங்கைக்குள் நுழைந்தனர்..இலங்கையில் இருந்தபடியே இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத செயல்கள் திட்டமிடப்பட்டன..கூடவே முக்கிய தீவிரவாத புள்ளிகளின் சந்திப்பும் இடம்பெற்றன.. தீவிரவாதிகள் பாகிஸ்தானில் இருந்துதான் வருவார்கள் என்று எதிர்பாத்திருக்கும் இந்தியாவுக்கு இலங்கை மூலம் உள்நுழைந்து அதிர்ச்சி கொடுப்பதே தீவிரவாதிகளின் திட்டம்..மேலும் பாகிஸ்தானில் அமெரிக்காவின் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியதும் லஸ்கர் இ தொய்பா இலங்கை நோக்கி தனது தளத்தை மெதுவாக நகர்த்தியது..

இலங்கையுடன் பாகிஸ்தான் நெருங்கி பழகுவதை பொறுக்காத இந்தியா இவர்களின் நட்பை உடைக்க ஒரு திட்டம் தீட்டியது...அதுதான் கடந்த வருடம் இலங்கை கிரிக்கேட் அணிமீது பாகிஸ்தானில் நடத்தப்பட்ட தாக்குதல்..ரோ மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் இலங்கை அணி வீரர்கள் மயிரிழையில் உயிர் தப்பினர்..இந்த தாக்குதல் மூலம் இலங்கை பாகிஸ்தான் நட்பை உடைத்து இலங்கையில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதே இந்தியாவின் திட்டம்..இலங்கை அரசுடன் இணைந்து பாகிஸ்தான் புலனாய்வு துறை செயல்பட்டதால் றோவிற்கு சந்தேகம் ஏற்படவில்லை..ஏனெனில் இலங்கை அரசு இந்த விடயத்தை மறைக்க எடுத்து கொண்ட பகீரதபிரயத்தங்களினால் றோவினால் எதுவுமே செய்ய முடியவில்லை

இதே நேரம் அமெரிக்கா இந்த வருட ஆரம்பத்தில் இலங்கையில் லஸ்கர் இ தொய்பா செயல்பட்டு வருவதாக ஒரு அறிக்கை வெளியிட்டது..அதே காலபகுதியில் தான் புனேயில் உள்ள ஜேர்மனிய பேக்கரியில் தாக்குதல் நடத்தப்பட்டது..இந்த தாக்குதலில் கைதான சந்தேக நபரை விசாரித்த வேளையில் தான் இலங்கை அரசின் வேடம் புலப்பட்டது..சந்தேக நபர் இலங்கையில் பயிற்ச்சி பெற்றவர் என்ற விடயம் இந்தியாவை அதிர்ச்சியடைய செய்துள்ளது..ஆனால் இந்த குற்ற சாட்டை கோத்தபாய வன்மையாக நிராகரித்துள்ளார்..பகிரங்கமாக உலகின் கண்முனாலேயே நடந்த தமிழர் படுகொலையே மறுத்த கோத்தபாய,திரை மறைவில் நடந்த இந்த விடயத்தை ஒத்துகொள்ளுவார் என எதிர்பார்ப்பது முட்டாள்தனமாகும்..

இந்த நிலையில் சமீபத்தில் அமெரிக்க புலனாய்வு துறை ஒரு எச்சரிக்கையை வெளியிட்டிருந்தது..அதாவது இலங்கையில் பாகிஸ்தான் லஸ்கர் இ தொய்பாவை சேர்ந்த 200 போராளிகள் உள்ளதாக அந்த எச்சரிக்கை கூறுகிறது...இது இலங்கை அரசு மீது இருந்த சந்தேகங்களை மேலும் வலுப்பெற செய்கிறது..இலங்கையின் குள்ளநரி தனத்தை புரிந்துகொண்ட இந்தியா இனி ராஜபக்ச அரசை சந்தேக கண்ணோடுதான் பார்க்கும்..இந்த நிலையில் இந்தியா ஈழ தமிழகளுக்கு ஆதரவான நிலைபாட்டை எடுக்கும் என உறுதியாக கூறமுடியாது...அப்படியே இந்தியா ஈழதமிழர்களுக்கு ஆதரவான நிலைபாட்டை எடுத்தாலும் அது காலம் கடந்த ஞானமாகவே இருக்கும் இருக்கும் என்பதில் மாற்றுகருத்து கிடையாது...

No comments:

Post a Comment