Search This Blog

Sunday, September 26, 2010

ஹாலிவூட் பார்வை-தி மிஸ்ட்(The Mist)


1980ம் ஆண்டு பிரபல அமெரிக்க எழுத்தாளர் ஸ்டீபன் கிங்கின் பிரபல நாவலை அடிப்படையாக வைத்து 2007ம் ஆண்டு நடிகர் தாமஸ் ஜேனின் நடிப்பில் வெளிவந்த திகில் படம் தான் தி மிஸ்ட்..


மனிதனின் மிகவும் அடிப்படை உணர்வான பயத்தை பற்றி அழகா கூறும் படம்..அமெரிக்காவில் உள்ள ஒரு சிறிய கிரமாத்தில் அடிக்கும் பயங்கர புயலுடன் ஆரம்பிக்கிறது படம்..திரைப்படங்களுக்கு போஸ்டர் டிசைன் செய்யும் தொழில் செய்பவர் டேவிட்(தாமஸ் ஜேன்) தனது மனைவி,மகன் சகிதம் ஓர் ஆற்றங்கரை அருகில் உள்ள வீட்டில் வசிக்கிறார்..புயல் அடித்த இரவு டேவிட் குடும்பம் சகிதமாக நிலத்தடி அறையில் இரவை கழிக்கிறார்..மறுநாள் விடிகையில் வெளியே வந்து பார்க்கும்போது புயலினால் வீடு பலத்த சேதம் அடைந்து காணபடுகிறது...


 அப்போது ஆற்றில் வெகுதொலைவில் ஒரு வெள்ளை நிற அடர்ந்த புகை அந்த கிராமத்தை நோக்கி வந்துகொண்டிருந்தது..மனைவியை வீட்டில் விட்டுவிட்டு மகனை அழைத்து கொண்டு பக்கதுவீட்டுகாரர் சகிதம் சூப்பர் மார்க்கெட்டுக்கு சாமான் வாங்க செல்கிரரர் டேவிட்..செல்லும் வழியில் இராணுவ வாகனங்களும் போலீசும் வேகமாக சென்றுகொண்டிருந்தன..
சூப்பர் மார்கெட் கூட்டத்தினால் நிரம்பி வழிந்தது..அங்கு இவர்கள் சாமான் வாங்கி கொண்டிருக்கையில் திடீரென்று பாரிய நிலநடுக்கம் ஏற்படுகிறது..சில வினாடிகளின் பின்னர் நிலநடுக்கம் நின்றுவிடுகிறது..சிறிது நேரத்தின் பின்னர் ஒரு வயதான மனிதர் மூக்கில் இரத்தம் வழிய அலறியபடியே ஓடி வந்தார்..


உள்ளே வந்து வெண்புகார் தன்னை துரத்துவதாகவும்,அதனுள்ளே இருந்து எதோ தன்னை இழுத்ததாகவும் கூறுகின்றார்.. அவர் கூரிகொன்டிருக்கும் போது மிகவும் அடர்த்தியான வெண்புகார் அந்த பகுதி எங்கும் பரவியது..அப்போது ஒருவர் பதறியடித்துகொண்டு தனது காரை நோக்கி ஓடினார்..சிறிது நேரத்தில் அவரது அலறல் சத்தம் கேட்டது..உடனே எல்லோரும் பதறியடித்துகொண்டு சூப்பர் மார்கெட்டின் கதவுகளை சாத்துகின்றனர்..ஓவொருவரும் வெண்புகார் பற்றி வேறுபட்ட கருத்துக்களை கூறுகின்றனர்..சிலர் அது ஊருக்கு ஒதுக்குபுறமாக இருக்கும் கெமிகல் பாக்டரி வெடித்தால் வந்ததென்றனர்..



சிலரோ இது இராணுவத்தின் இரகசிய சோதனையின் பின்விளைவென்றனர்.. எங்கும் மயான அமைதி நிலவியது...அப்போது டேவிட் சூபர்மார்கேட்டின் பின்பகுதிக்கு செல்கிறார்..அப்போது பின்கதவை எதோ பலமாக இடித்தது..உடனே டேவிட் இதை மற்றவர்களுக்கு கூறுகின்றார்..சிலர் இதை நம்ப மறுத்து டேவிட்டுடன் வாக்குவாத படுகின்றனர்..அதில் ஒரு இளைஞன் போய் பின்கதவை திறந்து வெளியே எட்டி பார்க்கின்றான்..அப்போது ஒரு பாரிய ஒக்டோபசை ஒத்த மிருகத்தின் கால் வந்து அந்த இளைஞன் ஐ இழுத்து செல்கிறது..உடனே இவர்கள் அவசரமாக கதவை சாத்திவிட்டு திரும்பி ஓடுகின்றனர்..அப்போதுதான் எல்லோருக்கும் அந்த வெண்புகாருக்குள் கொடிய மிருகங்கள் இருப்பது தெரியவந்தது..வேற்றுகிரக வாசிகளை ஒத்த அந்த மிருகங்கள் பூமிக்கு எப்படி வந்தன?இவர்கள் தப்பிக்க எடுக்கும் போராட்டங்கள் ஆகியவற்றுக்கான விடையுடன் முடிவடைகிறது படம்....சற்றும் எதிர்பார்க்காத கிளைமாக்ஸ் அதிரவைகிறது..


ஒரு மனிதன் அதீத பயத்திற்கு உட்படும் போது எவ்வாறு நடந்துகொள்வான் என மிக அழகாக இந்த படம் கூறுகிறது..மூன்று வகையான மனிதர்களை இந்த படத்தில் காணமுடியும்..ஒன்று அதீத பயத்தில் மூலைக்குள் இருந்து அழும் ரகம்,இரண்டாவது மனதுக்குள் பயம் இருந்தாலும் தன்னை பெரிய தைரியசாலி போல காட்டிகொள்ளும் ரகம்,மூன்றாவது நிலமைக்கேற்றவாறு சிந்தித்து முடிவெடுக்கும் ரகம்... வேற்றுகிரக மிருகங்கள் தரும் திகிலை விட பைபிளை படித்து அதன் மேலே பைத்தியமாக அலையும் அந்த பெண்மணி தரும் திகில் பயங்கரம்..பயத்தில் உறைந்துபோய் இருக்கும் மக்களிடம் தன்னை இறைவனின் பாத்திரமாக உருவகபடுத்தி இவர் செய்யும் அட்டூழியங்கள் திகில் ரகம்.. தனக்கு எதிராக பேசுபவர்களை இறைவனின் எதிரிகள் என சித்தரித்து ஏனையோரை அவர்களுக்கு எதிராக திசை திருபிவிடுகிறார் இவர்..மிருகங்கள் கொன்றதை விட தங்களுக்குள் அடித்துக்கொண்டு இறந்தவர்கள் அதிகம்..


பயம் என்ற உணர்வு எவ்வாறு ஒரு மனிதனை மாறுகின்றது என்பதை காட்சியமைப்புக்கள் தெளிவாக காட்டுகின்றன..ஒரு மனிதன் அதீத பயத்துக்கு உட்படும் போது அவனுடைய மனம் எவளவு பலகீனமானது என்பதையும்,யார் வேண்டுமானாலும் அவனை கட்டுபாட்டுக்குள் கொண்டுவரமுடியும் என்பதையும் அந்த பைத்தியகார பெண்மணியின் கதாபாத்திரம் அருமையாக விளக்குகின்றது..சற்றும் ஏதிர்பாராத கிளைமாக்ஸ் நெஞ்சை கனக்க வைக்கிறது..

தவறாமல் பார்க்க வேண்டிய ஒரு படம்...திகில் நிச்சயம்..

No comments:

Post a Comment