Search This Blog

Wednesday, September 22, 2010

எந்திரன் கதை வெளியானது!-ஷங்கர்,கலாநிதிமாறன் அதிர்ச்சி!

எந்திரன் கதை நேற்று பிரபல வெப்சைட்டில் வெளியானது ஷங்கரின் இயக்கத்தில் வெளியான படங்களில் முதன் முதலாக படம் வெளியாகும் முன்னரே கதை வெளியானது எந்திரன் மட்டுமே. செய்தி வெளியானது முதல் ஷங்கர் அலுவலகமும், சன் நெட்வொர்க் அலுவலகமும் அதிகப்படியான டென்சனில் இருக்கிறார்கள்.இது பற்றி தினத்தந்தி மூத்த பத்திரிகையாளர் ஒருவர் ஷங்கரிடம் பேட்டி காண தொடர்பு கொள்ள, அவர் மறுத்து விட்டார்.


சரி எந்திரன் கதை என்ன?

விஞ்ஞானி ரஜினி 10 வருடங்களாக கடுமையாக போராடி,தன்னைவிட 100 மடங்கு அறிவிலும்,திறமையிலும் மேன்பட்ட எந்திரனை உருவாக்குகிறார்.அந்த எந்திரன் 10 செகண்டில் ஒரு புத்தகத்தை மனப்பாடம் செய்து விடும்.அனைத்து விதமான சண்டைகளும் போடும்.அனைத்து விதமான நடனங்களும் ஆடும்.அனைத்து மொழிகளும் பேசும்.விஞ்ஞானி ரஜினியும் ஐஸ்வர்யா ராயும் காதலர்கள்.அவர்கள் காதல் புரிவதை ரோபோ ரஜினி ரசிக்கிறார்.கொஞ்சம் கொஞ்சமாக ஐஸ்வர்யாராயையும் ரசிக்கிறார்.

பிறகு உருகி உருகி காதலிக்கிறார்.ஐஸ்வர்யாராயிடம் சென்று தன் காதலை வெளிப்படுத்துகிறார்.அவர் அதிர்ச்சியுடன் அவருக்கு அறிவுரை சொல்கிறார்.நீ ஒரு எந்திரன்.நீ என்னை காதலிக்க முடியாது. நாம் சேர்ந்து வாழ முடியாது என சொல்ல ..எந்திரன் ரஜினி ஒத்துக்கொள்ள வில்லை.vமுன்னை விட தீவிரமாக காதலிக்கிறார்.விஞ்ஞானி ரஜினிக்கு இது தெரிந்ததும் கடுமையாக எதிர்க்கிறார்.இது நீ எனக்கு செய்யும் துரோகம்.உன்னை உருவாக்கியவன் நான்.எனக்கே துரோகம் செய்கிறாயா.. என ஆத்திரப்படுகிறார்.

அதற்கு எந்திரன்,மன்னிக்க வேண்டும்.நீங்கள் என்ன சொன்னாலும் நான் காதலிப்பதை கைவிட மாட்டேன் என சொல்ல விஞ்ஞானி ரஜினி திகைக்கிறார்.இதற்கிடையில் உடனே நாம் திருமணம் செய்ய வேண்டும் என ஐஸ்வர்யாராய் அவசரப்படுத்த நான் உருவாக்கிய எந்திரனை கண்டு நீ,பயப்படுகிறாயா என சிரிக்கிறார்.ஐஸ் பிடிவாதத்தால் அவசர திருமணத்திற்க்கு ஏற்பாடு செய்கிறார்.அதிர்ச்சி தரும் திருப்பமாக திருமண மண்டபத்தில் நுழைந்த எந்திரன் அனைவரையும் அடித்து நோறுக்கி விட்டு ஐஸ்வர்யாராயை கடத்த விஞ்ஞானி ரஜினி திகைப்புடன் பார்க்க அவரது நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைக்கிறார்எந்திரன் ரஜினி.

இடைவேளை

இதற்கிடையில் வில்லன் விஞ்ஞானி ரஜினியின் எந்திரன் ஃபார்முலாவை கைப்பற்றுகிறார்.அதன் மூலம் எந்திரனை தன் வசப்படுத்துகிறார்.சட்ட விரோத செயல்களுக்கு எந்திரனை பயன்படுத்துகிறார்.இதன் பிறகு தான் படம் ரொமாண்டிக் மூடிலிருந்து ஆக்சன் அதகளத்துக்கு மாறுகிறது.
சென்னையை அழிக்க வில்லன் குரூப் எந்திரனுக்கு தரும் அசைன்மெண்டை எந்திரன் நிறைவேற்றியதா..ஐஸ்வர்யராயை எந்திரனிடமிருந்து விஞ்ஞானி ரஜினி எப்படி காப்பாற்றினார் விஞ்ஞானி ரஜினி எந்திரனை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தாரா என்பது தான் கதை.

Source:http://www.virakesari.lk/cinema/news/001view.asp?key=3088

2 comments:

  1. story sema comedy....

    ReplyDelete
  2. இங்கயும் இந்த எழவு kathalthaana

    ReplyDelete